sdds (2)இந்தியாவின் 68வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போதுஇந்திய துணைத்தூதுவர் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் தமிழ் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மாணவர்கள், எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.