anurathapuram-jailகாணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும், இன்றுகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 19 பேரும், கொழும்பு மெகசின் சிறைச்சாலையைச் சேர்ந்த 54பேருமே இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.