youth parliamentகடந்த வருடம் நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதல் நாள் பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற த்தின் மாவட்ட தலைவர் மகேஷ் பெர்னான்டோ தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. குறித்த அமர்வானது இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவூட்டும் வேலைத்திட்டத்தின் கூடிய செயலமர்வாக அமைந்திருந்தது. நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து சிறப்பித்திருந்தார்