gerமுல்லைத்தீவு, கேப்பாப்புலவின் பிரதான வீதி பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட வேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாப்புலவு காணி முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கரைதுரைப்பற்று பிரதேச செயலர் சி.குணபாலன் கலந்துரையாடினார்.

இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமது கிராமத்தின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். கேப்பாப்புலவில் இருந்து புதுக்குடியிருப்புச் செல்லும் பிதான பாதையினை இராணுவத்தினர் தடை செய்து வைத்துள்ளனர். அவ்வீதி எது பாவனைக்காக திறந்து விடப்பட வேண்டும். எமது கிராமத்தின் வீதிகள் புனரமைக்கப்பட்டு பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலரிடம் தெரிவித்துள்ளனர்.