jaliya-wickramasuriyaஅரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை,

தொடர்ந்து 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, ஜாலிய விக்கிரமசூரிய சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைக்க பிணை மனுக் கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.