former LTTEபாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள், அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல விரும்புவார்களாயின், அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் மூவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட, புனர்வாழ்வுத் திணைக்கள வன்னிப் பிரிவுப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.ஹெமிடோன், உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இதுவரையில் புனர்வாழ்வுபெற்று, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.