வவுனியாவில் இளைஞர்களால் காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடிவிற்கான இறுதித் தீர்மானத்தை நல்லாட்சி அரசு வெளியிட வேண்டும் என்று இளைஞர்கள் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து நேற்றுமாலை 4.00 மணியளவில் அமைதிப்பேரணியினை ஆரம்பித்து வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரத திடலின் முன்றலில் நிறைவு பெற்றது.
இளைஞர்களின் அமைதி பேரணியில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்க இருந்த நிலையில், உண்ணாவிரத போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்த்தன அவர்களின் வருகை மற்றும் அவர் வழங்கிய உறுதிமொழியையடுத்து நிறுத்திக் கொள்ளப்பட்டது. Read more