Header image alt text

16326069_1091848884275566_1585733666_oவவுனியாவில் இளைஞர்களால் காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடிவிற்கான இறுதித் தீர்மானத்தை நல்லாட்சி அரசு வெளியிட வேண்டும் என்று இளைஞர்கள் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து நேற்றுமாலை 4.00 மணியளவில் அமைதிப்பேரணியினை ஆரம்பித்து வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரத திடலின் முன்றலில் நிறைவு பெற்றது.

இளைஞர்களின் அமைதி பேரணியில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்க இருந்த நிலையில், உண்ணாவிரத போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்த்தன அவர்களின் வருகை மற்றும் அவர் வழங்கிய உறுதிமொழியையடுத்து நிறுத்திக் கொள்ளப்பட்டது. Read more

sasaஇலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி நான்கு நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுமாலை அரசாங்கம் அளித்த உறுதிமொழியொன்றையடுத்து கைவிடப்பட்டிருக்கின்றது.

உண்ணாவிரதம் இருந்தவர்களை நேற்றுமாலை நேரடியாக வந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே தாங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக உண்ணாவிரதம் இருந்து வந்த காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார். Read more