dfdfdஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை நேற்று இரவு யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்றபோது யாழ் நகரப்பகுதியில் இருந்ததாகவும் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ் ஐந்து சந்தியில் கடை ஒன்றை நடத்துவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள்களை விநியோகிப்பவர் என சந்தேகிக்கப்படுகிறது.

மற்றவர் புத்தளத்தில் இருந்து இவருடன் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை மற்றுமொரு நபரும் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் இவ்விருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.