r3மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக 2,834 குடும்பங்களைச் சேர்ந்த 10,010 பேர் பாதிக்கபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரவிக்கின்றன.

கிரான் – தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,155 குடும்பங்களைச் சேர்ந்த 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரான் – புலிபாய்ந்தகல் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலக ஊழியர்கள் படகு மூலம் தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.