swordயாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவரைக் கைது செய்துள்ளதாக, அச்சுவேலிப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, மூவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆம் திகதி, அச்சுவேலி தெற்குப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆவரங்கால் நாவோதயா பகுதியினைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் படுகாயமடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.