jailபூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் குறித்த இரண்டு அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்களுடைய பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா கணேசபுரத்தைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு முல்லியவளையைச் சேர்ந்த ஒருவருமே பூசா தடுப்பு முகாமில் உண்ணாவிதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதத்தின்போது இவர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.