indian trolersமுல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவுக் கடலிலே இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் பல்வேறு வழியிலான போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடாத்திய நிலையில் அது சிறிது ஓய்ந்திருந்த இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.