missingஅண்மையில் காணாமல் போனதாக கூறப்பட்ட டெலிக்கொம் நிறுவனத்தின் மனிதவள (மேன்பவர்) ஊழியர் இங்கிரிய பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். இவர் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று தான் வேனில் கடத்திச் செல்லப்பட்டதாக கூறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மஹரகம பகுதியில் வைத்தே இவர் கடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக, இங்கிரிய பொலிஸார் சந்தேகநபரை பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.