jothidarஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டு உயிரிழப்பார் என, ஆரூடம் கூறிய பிரபல ஜோதிடரான விஜித ரோஹன விஜேமுனி, பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவனரால், கைது செய்யப்பட்டார். மேலும், “எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும்.

எனினும், அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன்” என, மேற்படி ஜோதிடர், கடந்த வருடம் ஆரூடம் கூறிய காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இது தொடர்பில், தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றத்தடுப்புப் பிரிவினர், நேற்று, அவரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் விஜித ரோஹன விஜேமுனி, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10,000 ரூபாய் காசுப் பிணையிலும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கான பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.