smoke bombபல்கலைக்கழக மாணவர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் மீது பொலிஸார் நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புப் தெரிவிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மருதானை – புஞ்சி பொரளை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என, கொழும்பு மேலதிக நீதவான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று காலை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி செயகம் அமைந்துள்ள திசை நோக்கி செல்வதற்காக லோட்டஸ் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முதலாவது வீதித் தடையை உடைத்து, முன்னேறிச் சென்ற நிலையில், கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.