முன்னிலை சோஷலிசக் கட்சியின் இணைப்புச் செயலாளர் குமார் குணரட்னத்திற்கு இம் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.