zxcxzcஎதிர்வரும் 10.02.2017 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ”எழுக தமிழ் எழுச்சிப் பேரணி” தொடர்பில் தெளிவூட்டும் துண்டுப்பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ”எழுக தமிழ்” ஏற்பாட்டுக் குழுவினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.