Header image alt text

O Panneer40 நிமிட தியானத்துக்கு பின் முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி; என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர், கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கினர், முதல்வராக்கி அசிங்கப்படுத்தி விட்டனர்,  தொண்டர்கள் விரும்பும் தலைவர்தான் கட்சியை நடத்த வேண்டும், என்னை புறக்கணித்து எம்எல்ஏக்கள் கூட்டம் , சசிகலா முதல்வராக தொண்டர்கள் விரும்பவில்லை,  தன்னந்தனியாக நின்று கடைசி வரை போராடுவேன்,  
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன்,
ஜெயலலிதா சமாதியில் சசிகலாவுக்கு பகிரங்க சவால் 
Read more

Panneerதமிழக சட்டமன்றம் கூடும் போது எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கண்கூடாக தெரியும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு எக்காலத்திலும் நான் துரோகம் இழைக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் கூறும் என்று தெரிவித்தார். Read more

panneerchelvamஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபாவை தன்னுடன் இணைந்து பணியாற்ற தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தான் நான் ஆட்சி செய்தேன். இனியும் என் பாதை அவர் காட்டிய வழியாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார். Read more

kiriyellaமாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதால் மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தினால் கூட மாற்ற முடியாது என அரசாங்கம், நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமையினாலேயே மாணவர்கள்மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, நிலையியற் கட்டளையின்கீழ், நாடாளுமன்றத்தில், நேற்றுக் கேள்வி எழுப்பினார். அக்கேள்விக்கு பதிலளிக்கும்போதே, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, மேற்கண்டவாறு பதிலளித்தார். Read more

kepapulavuமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத நிலையில் அக்கிராம மக்கள் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோருடன் போராட்ட பகுதியிலிருக்கும் அவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு இன்று விஜயம் செய்தனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோரை மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலாளரும் வலியுறுத்தினர். Read more

ahiraviraj newவடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

vithya suspectsபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் 05ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இப்படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்கக்கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

sfdமட்டக்களப்பு பொலிஸ் விடுதிக் கட்டடத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரிக் கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட இரண்டு யுவதிகள் மீது பொலிஸாரின் வாகனம் மோதியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றையதினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது குறித்த வாகனத்தைச் செலுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

busகடந்த வெள்ளிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தினை கண்டித்தும் மற்றும் புதிதாக திறந்துவைக்கப்பட்ட வவுனியா பேருந்து நிலையம் பயன்படுத்த முடியாமல் இருப்பதனை கண்டித்தும் நாளையதினம் வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது.

நாளைகாலை 7 மணியளவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள போராட்ட குழுவினர் யாழ் மாவட்ட போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர். இது தொடர்பாக யாழ் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெங்காதரன் கூறுகையில், கடந்த வாரம் யாழ் மாவட்ட தனியார் பேருந்து போக்குவரத்து சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. Read more