sfdமட்டக்களப்பு பொலிஸ் விடுதிக் கட்டடத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரிக் கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட இரண்டு யுவதிகள் மீது பொலிஸாரின் வாகனம் மோதியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றையதினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது குறித்த வாகனத்தைச் செலுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.