dgfgfgfவடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் சாரதிகள், ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளைக் கண்டித்தே இப் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளுக்கும், தனியார் பஸ் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகளும் கைகலப்புகளும் இடம்பெறுவதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், கடந்த 2ஆம் திகதிடு, புறக்கணிப்பில் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.