kiriyellaபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவங்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பில், 13ம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது புதிய அரசியலமைப்பின் நிமித்தம் ஒரு பிரிவையேனும் தயாரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.