qweqwவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். நாளை மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது. நாளை காலை 9.00மணிக்கு கல்லடி பாலத்தடியில் ஆரம்பமாகும் எழுச்சிப்பேரணி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்ததும் அங்கு பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்தினை நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. எழுக தமிழ் நடைபெறும் நாளையதினம் வியாபார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் கல்விச்சாலைகளை மூடி இந்த அகிம்சை போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.