யாழ். ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை 7.00மணியளவில் ஏழாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னைநாள் கிராம சேவையாளர் ஞானசபேசன், ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர் அங்கத்தவர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஏழாலை சொர்ணாம்பிகை சமேத அம்பலவாணேசுரர் ஆலயத்தால் வழங்கப்பட்ட மேற்படி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான காணியில் புதிய கட்டிடத்தினை கட்டி முடிப்பதற்கு 40லட்சம் ரூபாய் செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.