Header image alt text

P1410794கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். எப்போதும் ஒரே குரலில் தான் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நீங்கள் உலகிற்கு ஒரு செய்தியைச் சொல்லியுள்ளீர்கள் என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய உணர்விலும் போராட்டத்திலும் வேறு எந்த மாவட்டத்திற்கும் சலைத்தது அல்ல. கிழக்கு மாகாணத்திலே அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்துதான் அனைத்து இயக்கங்களுக்கும் மிகப் பெருந்தொகையான இளைஞர்கள் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்வதற்கு சேர்ந்தார்கள் என்ற உண்மையை நான் இங்கு கூறித்தான் ஆகவேண்டும். Read more

q2ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கி.லதீஸ் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள 102 பெண் சிறார்கள் தங்கியிருக்கும் பாரதி இல்ல உணவு களஞ்சியத்திற்கு இன்று 250 கிலோ சம்பா அரசிப் பைகளை அன்பளிப்பாக வழங்கி அவர்களின் களஞ்சியத்தில் உள்ள அரிசி இருப்பை மேலும் உறுதிபடுத்தியுள்ளார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு இல்ல சிறார்களின் உணவு பொருட்களின் இருப்பை உறுதிபடுத்தியுள்ள கி.லதீஸ் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் தருணம் இவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள்ளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்ந்து நற்பணிகள் செய்து வாழ இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்). Read more

P1410775தமிழ் மக்களுக்கு சரியான தீர்வொன்றை இந்த அரசாங்கம் வழங்கும் வரையில் அறவழி போராட்டம் தொடரும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – நாவற்குடா மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு எழுக தமிழ் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே இந்த நல்லாட்சி கொண்டுவரப்பட்டது. அதற்கு அப்பால் உடனடி தீர்வுகளை எதிர்பார்த்திருந்தனர். அதன் அடிப்படையில், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், தமிழர்களுடைய வடகிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல் ஆக்கோப்பட்டோருக்கான நீதிகள் வழங்கப்படவேண்டும், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறந்த வாழ்வாதரத் திட்டங்களை ஏற்படுத்தப்படவேண்டும்,
Read more

tpcதமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் கீழ் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்கிற அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என வட மாகாண முதல் அமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பு தொடர்பாபக பத்திரிகையாளர்களுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார். Read more