sigiriaதம்புள்ளயில் உள்ள சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிகிரியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்கள் அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சிகிரியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.