Header image alt text

erretrஅமெரிக்காவில் சட்டபூர்வமான ஆவணங்கள் எதுவுமின்றி வசித்து வந்த, பல்வேறு சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அந்நாட்டு பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 30லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள். என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். குறித்த வாக்குறுதியிற்கிணங்க, பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவால், அமெரிக்காவிலிருந்து சுமார் 30 இலட்சம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. Read more

fdதமது காணிகளிலுள்ள அடையாளங்களை இராணுவத்தினர் அழிப்பதாக, பிலவுக்குடியிருப்பு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமது அடையாளங்களை இராணுவத்தினரல் அழிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள இம்மக்கள் அது குறித்து தெரிவிக்கையில், ‘எமது காணிகளிலுள்ள பயன்தருமரங்களை இராணுவத்தினர் அழித்து வருகின்றனர், நாம் போராட்டம் ஆரம்பித்த பின்னர், அங்கு வருபவர்களிடம், எமது காணிகளில் நாம் வாழ்ந்ததுக்கான ஆதாரங்களாக, வீடுகளின் அத்திவாரங்கள், மலசலகூடங்கள், கிணறுகள், நீண்டகால பயிர்கள் எனபவற்றை அடையாளம் காட்டி வருகின்றோம். Read more

X11யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் வழங்கப்படாது தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களில் இருந்துவரும் நிலையில் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை தமக்கே வழங்கக்கோரி இன்றுடன் 13ஆவது நாளாக தமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விமானப்படை முகாமிற்கு முன்னால் தொடர்ச்சியாக நில மீட்பிற்கான சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்தில் இன்று வட்டு இந்து வாலிபர் சங்க உறுப்பினர்களும் பங்கு பற்றியதுடன். தமிழ் புலம்பெயர் அமைப்பான லண்டனைச் சேர்ந்த எதிர்காலத்திற்கான பாதை என்ற அமைப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கேப்பாபுலவு மக்களுடன் அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 200 மதிய உணவு பொதிகளையும் சுமார் ரூபா 60,775 பெறுமதியான உலர் உணவுப்பொருட்களான அரிசி 200கிலோ பால்மா 30 பெட்டி சீனி 100கிலோ ரின்மீன் 25 தேயிலை 10கிலோ சோயா 10கிலோ பருப்பு 25கிலோ பிஸ்கட் 10 பெட்டி நுளம்புத்திரி 10பெட்டி கற்பூரம் 10 பெட்டி என்பவற்றையும் வழங்கியுள்ளது. Read more

cvbcvbதமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று நண்பகல் வாய்களை கறுப்புத்துணியால் கட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிறுவகத்தின் வகுப்புகளிலிருந்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் வீதியில் இறங்கி கல்லூரியின் நுழைவாயிலை மறித்து மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எமக்கு நீதி தேவை.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

dead.bodyயாழ். சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணித்த, பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இவ்வாhறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். குறித்த பெண் அவ் வீட்டில் கணவருடன் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

sfdffdஇலங்கை ஆசிரியர் சங்கத்தினர், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9.30 மணியளவில், செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக, ஆசிரியர் சங்கதினர் இந்த தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். “

வடமாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும், பணித்தடை வழங்கப்பட்ட 3 ஆசிரியர்களை மீள இணைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும், செயலாளரை தாக்கியதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரின் செயலகம் பதிலளிக்க வேண்டும், முறையான இடமாற்றதினை நடைமுறைப்படுத்த வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.