dead.bodyயாழ். சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணித்த, பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இவ்வாhறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். குறித்த பெண் அவ் வீட்டில் கணவருடன் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.