asdsadமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து, உடல், உள மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளை இன்று நடாத்தியுள்ளனர்.

வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம் அவர்களது தலைமையில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது, கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், குண்டு, பரிதி எறிதல், அப்பிள் சாப்பிடுதல், வலைப்பந்தாட்டம் உட்பட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினருக்கும் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெற்றி பெற்றனர். இதன்போது வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.