P1410815யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 2017-நிகழ்வு நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திரு. மோகநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக லோ.விஸ்வநாதன் (நிர்வாக உத்தியோகத்தர் கல்வியமைச்சு, வடமாகாணம்), சுபாஸ் மஞ்சுளா கந்தவல (கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான சி.தினேசன் (வைத்தியர், யாழ் போனதா வைத்தியசாலை), திரு. க.தர்சன், திருமதி த.லீலாராணி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதியில் விருந்தினர்களால் போட்டியில் வெற்றிபெற்ற பிள்ளைகளுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.

P1410812 P1410816 P1410822 P1410830 P1410842 P1410849 P1410852 P1410856 P1410858