Header image alt text

sadffdகேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை காணியாகும், தேவையில்லாமல் உட்செல்லல் தடை, தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. Read more

sfd (2)இலங்கையில் சிறுபான்மை மக்கள் வாழும் மற்றும் வழிபடும் இடங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன், சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயற்பாடுகள் குறித்து மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன் இவ்வாறு கூறியுள்ளார்.

weeeகேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் நிலத்தை தங்களிடம் கையளிக்கக் கோரி இன்றும் 18வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்புகளும் தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் இன்று கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களும் கேப்பாவிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். இன்றுகாலை ஒன்பது மணிமுதல் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-6cdd1bdc68ba8fb64ce34c7474c57debd213c90ab6eca2882084170723346155-Vயாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட வலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் இன்றுகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றுகாலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டநிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் ஆகியோருக்கு மகஜர் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. Read more

sfdநியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8ஆவது புதிய கண்டமாகக் கருதமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏனைய 94 சதவீதமான பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

arrestசட்டவிரோதமான முறையில் படகு மூலம் நியூஸிலாந்து நோக்கிச் செல்வதற்கு தயாராக இருந்த 08 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் சட்ட அதிகார பிரிவு குழுவினரால் கதிராணை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, மாரவில, கல்முனை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிசார் இவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

sfdfdfdதகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், வெகுசன ஊடக மற்றும் நாடாளுமன்ற சீர்த்திருத்த அமைச்சிடம் தகவல் கோரி, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விண்ணப்பித்திருந்தார்.

தகவல் கோரப்பட்டு 14 நாட்களுக்குள் அதற்காக பதில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், ரஞ்சன் ராமநாயக்க கோரிய தகவலுக்கு நான்கு நாட்களில் பெற்றுக்கொடுக்க அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ரஞ்சனின் கோரிய தகவலுக்கு இன்றைய தினம் பதில் பற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமையை உத்தியோகப்பூர்வமாக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

maithriவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரண உதவி வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்றை ஸ்தாபித்து வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உண்மையான தரவுகளை சேகரித்ததன் பின்னர் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் சிறுபோகம் ஆரம்பிக்கப்படும் வரை இந்த நிவாரணத் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வறட்சி காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.