weeeகேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் நிலத்தை தங்களிடம் கையளிக்கக் கோரி இன்றும் 18வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்புகளும் தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் இன்று கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களும் கேப்பாவிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். இன்றுகாலை ஒன்பது மணிமுதல் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.