arrestசட்டவிரோதமான முறையில் படகு மூலம் நியூஸிலாந்து நோக்கிச் செல்வதற்கு தயாராக இருந்த 08 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் சட்ட அதிகார பிரிவு குழுவினரால் கதிராணை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, மாரவில, கல்முனை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிசார் இவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.