Header image alt text

P1420267கடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது.

கடந்த வருடம் சம்பியனான பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி, கிரிக்கெட், வலைப்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் அணியினர், ஆண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியனான ஆண்கள் அணி, கூடைப்பந்தாட்டத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஆண்கள் அணி ஆகியன இதன்போது கௌரவிக்கப்பட்டன. ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற செந்தூரன், ஆண்களுக்கான தட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரகாஸ்ராஜ் மற்றும் தேசியமட்ட கலாசாரப் போட்டியில் வெற்றிபெற்றோரும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், சுகிர்தன், பரஞ்சோதி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

P1420159யாழ். கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலயத்தின் அதிபர் கி.தர்மசீலன் அவர்களின் தலைமையில் 16.02.2017 வியாழக்கிழமை நடைபெற்றது.

மேற்படி நிகழ்வின் பிரதம விருந்திரனராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கோ.பாரதராஜமூர்த்தி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக முருகையா சுரேந்திரராஜா (பழைய மாணவர்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதியில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களுடன், பெருந்தொகையான பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Read more

sfயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் மற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விடயத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்ரேலிய பணிப்பாளர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்னமும் இயல்பு நிலைமை முழுமையாக ஏற்படவில்லை என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்த நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

SFDFகேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்தவிதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள விமானப்படையினர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினையும் தமது ஆக்கிரமிப்புக்குள் வைத்துள்ளனர். Read more

sureshஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கும் 18 மாதகால அவகாசத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கால அவகாசம் கோருவது அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். கால அவகாசம் நீடித்தால், தமிழ் மக்களின் பிரச்சினை நீர்த்துப்போன பிரச்சினையாக மாறிவிடும். எனவே அரசாங்கம் கோரும் கால அவகாசம் நீடிக்க கூடாது. Read more

fsdகிளிநொச்சி குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு ரூபா 20,920 பெறுமதியான கணித உபகரணப்பெட்டிகள், பென்சில் பெட்டிகள், கலர் பெட்டிகள் மற்றும் உடற்பயிற்சிக்கான ஆடைகள் என்பன இன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைச் செயலகத்தில் வைத்து பாடசாலை ஆசிரியர் திருமதி.ஜெசிந்தா ராகவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவைக்கான விண்ணப்பமானது பாடசாலை அதிபரினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க பாடசாலை மாணவர்களின் கல்வியினையும் திறன் விருத்தி செயற்பாடுகளையும் ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்டுள்ளது. Read more

arrestகனடா டொரன்டோ பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் (இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ranil singaporeஇலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இந்த வருடத்திற்குள் கைச்சாத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பும் வழியில் நேற்று இரவு சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது இரண்டு பிரதமர்களும் கலந்துகொண்ட இரவு விருந்துபசாரத்தின்போது இது தொடர்பில் பேசிக்கொண்டதாக சிங்கப்பூர் பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவம் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.