ranil singaporeஇலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இந்த வருடத்திற்குள் கைச்சாத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசின் லுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பும் வழியில் நேற்று இரவு சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது இரண்டு பிரதமர்களும் கலந்துகொண்ட இரவு விருந்துபசாரத்தின்போது இது தொடர்பில் பேசிக்கொண்டதாக சிங்கப்பூர் பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவம் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.