sfdகளுத்துறை கட்டுகுறுந்த கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கிய 36 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதில் 26 பேர் பேருவளை மருத்துவமனையிலும் மேலும் 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பேருவளையிலிருந்து கட்டுகுருந்த பகுதிக்கு மதவழிப்பாட்டிற்காக படகொன்றில் சென்றிகொண்டிருந்த போதே இவர்கள் விபத்தில் சிக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.