sfdவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்றுகாலை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வில் அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமயத் தலைவர், முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், பொலிஸார், விமானப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர். இன்றைய புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற தேவராஜா ஜெகதீபன் மட்டக்களப்பு, றங்கசாமி நந்தகுமார் மட்டக்களப்பு, யோசப் டின்டாஸ் விவிலியன் மட்டக்களப்பு, கணேசன் துசாந்தன் மட்டக்களப்பு ஆகிய நான்கு பேரே தமது குடும்பத்துடன் இணைத்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.