ertrtereகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 70 இற்கும் அதிகமானோர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் விரைவில் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என கோரியே இவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இரவுபகலாக தொடர்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.