zxcxcகாணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உட்பட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலகத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள், ஆண், பெண் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரச அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம், அரச உத்தியோகத்தர் பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளிகளை உடன் கைது செய், அரச உத்தியோகத்தரை பாதுகாக்கவும், அரச அலுவலர் மீதான தாக்குதல்கள் மேலும் தொடருமா? போன்ற பல்வேறு தமிழ் வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி தங்களது எதிர்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்க்கது.