dfdfdfdதனது குரல் வளத்தால் ஒட்டுமொத்த தமிழினத்தையும் வசீகரித்து கொண்ட ஒர் உன்னத கலைஞன். புரட்சிகர பாடல்கள், இறைபாடல்கள் என்று பல்வேறு பாடல்களைப் பாடி ஈழத்தின் பிரபல பாடகர் என்ற பெருமையை பறைசாற்றிய கலைஞர். அவரது குரலில் வெளிவந்த பல புரட்சிகர பாடல்கள் ஈழத்தின் ஆலயங்களின் வரலாறுகளை எடுத்து கூறும் பாடல்கள் என்று பல பாடல்களை தந்த ஒர் உன்னத குரலுக்கு சொந்தக்காரரான சாந்தன். கடந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக கவிஞர் மாணிக்கம் ஜெகனின் வரிகளிற்கு ஈழத்தின் மற்றுமொரு முன்னணி இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கணீர் என்ற குரலுக்கு சொந்தக்காரன் S.G சாந்தனின் குரலில் வெளிவந்த பாடல் ஒன்றை இன்று நினைவு மீட்கின்றோம்.

இவை மட்டுமல்ல இந்த மண் எங்களின் சொந்தமண்….” புட்டுக்கு மண் சுமந்த பெருமானே….. என்று நிறைய பாடல்களை பாடி ஈழத்தமிழ் மக்கள் மனங்களில் என்றுமே தனக்கென ஒர் முத்திரையை பதித்த கலைஞன் இன்று எம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவர் பிரிந்தாலும் அவர் விதைத்துச் சென்ற பாடல்கள் என்றும் உயிர்வாழும் என்பது நிதர்சனம். அன்னாரது இழப்பால் துவண்டுபோயுள்ள ஈழத்து கலைஞர்கள், உறவுகள், நண்பர்களுடன் நாமும் எம்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.  (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி -கனடா)