dfsdகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரியும் யாழ். உரும்பிராயில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது உரும்பிராய் பலாலி வீதியில், இன்று காலை உரும்பிராய் பங்கு திருச்சபை மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் “அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி எம்மை வாழ விடு, எங்கள் கோரிக்கைகளுக்கு முடிவே வராதா?, இன்னும் எத்தனை காலம் தான் நாங்கள் அகதியாக வாழ்வது!, நல்லாட்சி அரசில் நல்லதைச் செய்யுங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன? போன்ற வாசகங்கள் இருந்த பதாதைகளை தாங்கி இருந்தனர். இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?, அவர்களை மீட்டுத்தாருங்கள் போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.