dsdsssகளுத்துறையில் வைத்து, சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த ஏழுபேரில், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் அடங்குகின்றனர். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிகள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.