sfdfமட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் நேற்றுமாலை 4 மணியளவில் இடம்பெற்ற கோடரி வெட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் நபரொருவர், வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தாம், காயமடைந்த நபரை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்டில் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. இந்த கோடரி வெட்டுச் சம்பவத்தையடுத்து தலைமறைவாகியிருந்த முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரனின் கணவரான, கனகசபை பிரபாகரன், மட்டக்களப்பு பொலிஸில் நேற்று மாலையே சரணடைந்துள்ளார். அவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.