sfd (2)புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக, நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும் கிணற்றினை துப்பரவு செய்யும்போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர் தகவலளித்துள்ளார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லியடி பொலிஸார், குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர். 1988ம் ஆண்டிற்குப் பின்னர் இந்த கிணறு பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதன்படி அங்கு மீட்கப்பட்ட குண்டுகளை பருத்தித்துறை நீதிமன்றத்தில் கையளிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக நெல்லியடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.