dgfgf (2)மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ். மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இந்த கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றுகாலை 8.30மணி தொடக்கம் 10.30 மணிவரை முன்னெடுக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.