Header image alt text

sfd (2)புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக, நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும் கிணற்றினை துப்பரவு செய்யும்போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர் தகவலளித்துள்ளார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லியடி பொலிஸார், குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர். 1988ம் ஆண்டிற்குப் பின்னர் இந்த கிணறு பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. Read more

sfdfமட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் நேற்றுமாலை 4 மணியளவில் இடம்பெற்ற கோடரி வெட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் நபரொருவர், வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தாம், காயமடைந்த நபரை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். Read more