arrest (9)காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது கெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும், கிரான் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சம்பவத் தினத்தன்று அவர் கொழும்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.எனினும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு களுதாவளை பகுதியில் நேசகுமார் விமல்ராஜ் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.