sdsfsssகேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் ஒரு மாதகால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக இன்றையதினம் அவர்களின் சொந்தக் காணிகள், அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர். எனினும் பிலக்குடியிருப்பிலுள்ள 54 குடும்பங்களின் காணியில் 42ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. இதேநேரம் மேலும் 8 குடும்பங்களின் காணிகள் தற்பொழுது விடுவிக்கப்படாது என்று இராணுவத்தினர் கூறியுள்ள நிலையில் 8 குடும்பங்களின் காணிகளும் விடுவிக்கப்படும்வரை போராட்டம் தொடருமென பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.