ssவவுனியாவில் காணாமற்போனோரின் உறவுகளின் போராட்டத்திற்கு வவுனியா வளாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று 6ஆவது நாளாகத் தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கே குறித்த ஆதரவினை பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கியுள்ளனர். இன்று பிற்பகல் 1மணியளவில் வவுனியா வளாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் நோக்கில் ஆசிரியர் சங்கம், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பேரணியாக வந்து காணாமற்போன உறவுகளுக்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.