sfsdமாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக இன்று காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்கவில்லை. நோயாளர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிகளின் சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது இலங்கை வைத்திய சேவையில் தரமற்ற வைத்தியர்களை உள்வாங்கும் செயற்பாடாகும். பணத்துக்காக நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிரான பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.