chief justiceஇலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப் இன்று காலை பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் 44வது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் ஓய்வு பெற்றதையடுத்தே 45 வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

அவர் பதவியேற்கும் நிகழ்வு இன்றுகாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 2007-2011 வரையான காலப்பகுதியில் அரச சொலிஸிஸ்டர் ஜெனரலாகக் கடமையாற்றிய இவர், பல தடவைகள் பதில் பிரதம நீதியரசராகவும் கடமையாற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.